Wednesday, August 31, 2011

மனம் நிறைந்த மாநாட்டின் மனதை விட்டு நீங்கா நினைவுகள்



இன்சூரன்ஸ் ஊழியர்களின் இணையற்ற பேரணி




                             மதுரை 55 வது கோட்டச்சங்க பொது  மாநாட்டின்
                                                  நிகழ்வுகளில் சில துளிகள் ... 

Monday, August 29, 2011

ஊடகங்களை ஊடுருவிய ஊழியர் சங்க மாநாடு


AIIEA asks Centre to withdraw LIC Amendment Bill

PTI Aug 28, 2011, 03.18pm IST

MADURAI: The All-India Insurance Employees Association has asked the Centre to withdraw the proposed LIC Amendment Bill (2009) and Insurance Law Bill, failing which it would go on agitation.
The amendment foresees permits raising the FDI limit in the insurance sector, AIIEA General Secretary K Venugopal said.
Every year, Rs 2.5 lakh crore is mobilised as premium by Life Insurance Corporation and this was the savings of people and it was going to be placed in the hands of foreign capital, where even the government would have less control, he told reporters here last evening.
The Standing Committee of Parliament on Finance, while submitting a report on the LIC Amendment Bill, 2009, had said the sovereign guarantee on LIC policies and surplus distribution of shares to policy holders should continue.



                     29 .08 .2011  அன்று   தினமணி நாளிதழில் வெளியானது மதுரை
வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்: கே. வேணுகோபால்

First Published : 29 Aug 2011 09:08:37 AM IST



மதுரை, ஆக. 28: வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச்செயலர் கே. வேணுகோபால் தெரிவித்தார்.
 காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க, மதுரைக் கோட்ட 55-வது பொது மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
 அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவில் அதன் பாதிப்பு அதிகமில்லை. இதற்குக் காரணம், நம் நாட்டில் மக்கள் சேமிப்பு பழக்கம் உடையவர்களாக இருந்ததே. இந்த சேமிப்பில் காப்பீட்டுக் கழகம் முக்கியப் பங்காற்றி உள்ளது.
 அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு அதிகமாக கடன் அளித்துள்ளன. கடனை திரும்ப வசூலிக்க முடியாத நிலையில் அவை நஷ்டமடைந்தன. இதுவும், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.
 அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்த நிலையில், அந்நாட்டு நிறுவனங்கள் நமது நாட்டிற்கு வர அனுமதிப்பது சரியல்ல. நாட்டில் 26 சதவிகித அன்னிய நிறுவன முதலீட்டுக்கும் அதிகமாக அனுமதித்தால், நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
 வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது நாட்டு வங்கிகள் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் செயல்படும் நிலை ஏற்படும். அது நல்லதல்ல. உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் மட்டுமல்ல, காப்பீடு செய்வோர் எண்ணிக்கையிலும், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய நிலையில் வெளிநாட்டு காப்பீடு நிறுவனங்களை அதிகளவில் அனுமதிப்பதை எதிர்க்க வேண்டும்.
 வெளிநாட்டு காப்பீடு நிறுவனங்களை அதிகமாக அனுமதிக்கும் பிரச்னையில், பொதுமக்களது கருத்தை திரட்டவேண்டியது அவசியம். இதற்காக முக்கிய இடங்களில் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
 வங்கி உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து போராட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 கடந்த 50 ஆண்டுகளாக நாட்டில் ஊழல் அதிகரித்து வந்துள்ளது. அதற்கு காரணம் பொதுத்துறைகளில் தனியார் நிறுவனத்தை அனுமதித்ததே ஆகும். தனியார் நிறுவனங்களுக்காக அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.
 கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிறப்புரையற்றினார். சங்கத்தின் மதுரைக் கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் மாநிலக்குழு ரா.ஜோதிராம் மற்றும் பா.விக்ரமன், க.சுவாமிநாதன், கோட்ட பொதுச்செயலர் என்.சுரேஷ்பாபு, எல்.பழனியப்பன், ஆர்.கே.கோபிநாத், முத்துகுமாரசாமி, தமுஎச மாவட்டநிர்வாகி ப.கவிதாகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 தீர்மானங்கள்: மாநாட்டில் பொதுத்துறை பங்கு விற்பனை நடவடிக்கையை கைவிட வேண்டும்.எல்.ஐ.சி. முகவர்களின் குறைந்தபட்ச வணிகநிபந்தனைகள் உள்ளிட்ட முகவர்களின் நலனைப் பாதிக்கும் ஸ்வரூப் கமிட்டி பரிந்துரையை கைவிடவேண்டும். எஸ்.சி.எஸ்.டி.ஊழியர் நலன்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். கல்வி, சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
               
  29 .08 .2011  அன்று  தின மலர் நாளிதழில் வெளியானது 
பதிவு செய்த நாள்ஆகஸ்ட் 28,2011,00:41 IST
மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வேலை நிறுத்தம் எல்..சி., ஊழியர்கள் முடிவு

மதுரை : ""எல்..சி., தொடர்பான மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம்,'' என அகில இந்திய காப்பீட்டு தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: காப்பீட்டு துறையில் 80 சதவீத ஊழியர்கள் அமைப்பில் உள்ளனர். எல்..சி.,யின் சொத்து மதிப்பு ரூ. 13 லட்சம் கோடி. 38 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்த ஆண்டு அரசுக்கு ஈவுத் தொகையாக எல்..சி., ரூ. 1137 கோடி வழங்க உள்ளது. இந்த அமைப்புக்கு கடந்த 4 மாதங்களாக முழுநேர தலைவர் இல்லை. பாலிசிதாரருக்கு வழங்கும் போனஸை குறைப்பது, பாலிசிகளுக்கான உத்தரவாதத்தை திரும்ப பெறுவது என்ற 2 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 26 சதவீத அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயரும் வகையில் மற்றொரு மசோதாவை அரசு அறிமுகம் செய்துள்ளது. இவற்றை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வோம். வலுவான லோக்பால் அமைப்பு வரவேண்டும். இதில் என்.ஜி..,க்கள் பெரிய முதலாளிகள், கார்ப்பொரேட் அமைப்புகளும் உள்ளடங்கி இருக்க வேண்டும், எனக் கூறினார். கோட்ட பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், தென்மண்டல உதவி பொருளாளர் ஆர்.கே.கோபிநாத் உடனிருந்தனர்.



              29 .08 .2011  அன்று   தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி 



Thursday, August 25, 2011

55 வது கோட்டசங்க மாநாட்டு அழைப்பிதழ்

வாருங்கள் தோழர்களே ...
வடம் பிடிப்போம், வரலாற்றில் இடம்பிடிப்போம் ... 

Tuesday, August 23, 2011

தோழர் M . கிரிஜா அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்

தோழர் M . கிரிஜா அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்
  
தென் மண்டல இன்சூரன்ஸ்  ஊழியர்  கூட்டமைப்பின் இணைச்செயலாளர்  
தோழர் M.கிரிஜா அவர்கள் திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக
மாதர் சங்கத்தின்  தமிழ் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராக
தேர்வு செய்யப்பட்டார். இது அவரது சோர்விலா உழைப்பிற்கு கிடைத்த பணி. இன்சூரன்ஸ் அரங்கம் தாண்டிய அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.




Monday, August 22, 2011

வெள்ளி விழா தடம் பதிக்கும் தல்லாகுளம் கிளைச்சங்கம்

வெள்ளி விழா கண்ட தல்லாகுளம் கிளைச்சங்க விழாவில்
தோழர்  க.சுவாமிநாதன் தென்மண்டல பொதுச் செயலாளர் பங்கேற்பு
  
      


 

Sunday, August 21, 2011

மதுரையை மையம் கொள்ளும் மகத்தான மாநாடு

                                                                    மதுரையை மையம் கொண்டுள்ள  
மகத்தான மாநாட்டு நிகழ்வுகள்... 




           மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்



                                                                                            

உழைப்பாளி வர்க்கத்தின் உன்னத தலைவருக்கு


            உழைப்பாளி வர்க்கத்தின் உன்னத தலைவருக்கு உளமார்ந்த
                                                                      அஞ்சலி
                                                                  

CPI(M) Polit Bureau member M.K. Pandhe. File photo
Add caption

                                           
                                             
அகில இந்திய தொழிற்சங்கமையத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் , தலைவரும் தற்போதைய உதவித் தலைவருமான        தோழர்.டாக்டர்.எம்.கே.பாந்தே,அவர்கள் நேற்றைய தினம் ஆகஸ்ட்  ௨௦   அன்று அதிகாலை ௦௦.20  மணியளவில் மறைந்தார்.


தோழர்.டாக்டர் எம்.கே. பாந்தே 1925 ஜூலை 11 - ல் பிறந்தார். 1946ல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தன்னை இணைத்து கொண்டதன் மூலம் தனது தொழிற்சங்கவாழ்க்கையை துவக்கினார். நாட்டின் ஒன்றுபட்ட ஓர் உயர்மட்ட தொழிற்சங்க  மையத்தை நிறுவதில்   முக்கியமான   தனது  பங்களிப்பை நல்கினார், பின்னர் சி.ஐ.டி.யூ வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து அதன் பொதுச்செயலாளர், தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டார் தனது வாழ் நாள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக  தன்னை அர்ப்பணித்த  தோழர் எம்.கே.பாந்தே அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அத்தகைய மகத்தான தலைவர் எந்த நோக்கத்தோடு தன் வாழ்நாளின் பெரும் பகுதியை   அர்ப்பணித்தாரோ  அந்த  நோக்கம் நிறைவேற உறுதி ஏற்பதே அவருக்கு நாம் செலுத்தும்   அஞ்சலி.

Monday, August 15, 2011

சேலம் தீண்டாமை ( அவல) சுவர் இடிப்பு

சேலம் தீண்டாமை ( அவல) சுவர்  இடிப்பு
           கடந்த 20 வருட காலமாக சேலம் ராமன் காலனியில்    இருந்து வந்த  தீண்டாமை சுவரை அகற்றிய சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.                    
                                                                                                                                                                                                                                                                                                                                               ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக விளங்கும் ஹிந்து போன்ற 
பத்திரிக்கைகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ச்சியாக நடத்தி
 வந்த போரட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமரசமற்ற தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த மற்றும் ஒரு நம்பிக்கை கீற்று. 
இத்தகைய நம்பிக்கையோடு பயணிப்போம், தீண்டாமை ஒழிப்பு நமது பயணம் ஜாதிய, வர்க்க பேத ஒழிப்பு நமது இலக்கு என்ற திசை வழியில் பயணிப்போம், சகல பகுதி மக்களையும் நமது பயணத்தில் இணைப்போம் முன்னேறுவோம் . நம்பிக்கையுடன் ....
 
 
 
  

தமிழ் மாநில தலைமைப் பயிற்சி முகாம் குன்னூர்- ஆகஸ்ட், 14 & 15 , 2011

தமிழ் மாநில தலைமைப் பயிற்சி முகாம் குன்னூர்- ஆகஸ்ட், 14 & 15 , 2011



தோழர் அமானுல்லாகான் இரண்டு நாளும் பங்கேற்கிறார்.
இடதுசாரி அரசியல் மீதான தாக்குதலும்- எதிர்காலமும் என்கிற தலைப்பிலும் , பொது இன்சூரன்ஸ் தோழர்களுக்கான
சிறப்பு அமர்வில் " பொது இன்சூரன்ஸ் எதிர்கொள்ளும்
சவால்கள்
" என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளார்.

தோழர் க.சுவாமிநாதன் " சமுக ஒடுக்குமுறையும்- தொழிற்சங்க
இயககங்களின் எதிர்வினையும் "
என்ற தலைப்பிலும்,
தோழர் எம்.கிரிஜா " பாலின நிகர்நிலைப் பார்வையும் - தொழிற்
சங்க இயக்கமும்"
என்ற தலைப்பிலும் தோழர் ஆர்.தர்மலிங்கம்
நமது அமைப்பு என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனர்.

முதல் நாள் இரவு கோட்டப் பொதுச் செயலாளர்களுடன்
கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது.

தோழர் குன்னிக் கிருஷ்ணன், தோழர் ஜே.குருமூர்த்தி ஆகிய
தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

குன்னூர் கிளைத் தோழர்கள் பயிலரங்கத்திர்கான ஏற்பாடுகளைச்
செய்து வருகிறார்கள்.

Wednesday, August 10, 2011

AIIEA - ICEU Blog is on the web!!!

AIIEA - ICEU Blog is on the web now.

55th General Conference of ICEU at Madurai

ICEU's 55th Conference is about to be held at Madurai on 26-28th August 2011

at Arunachalam-Kamalambal Kalaiarangam, near Ganesh Theatre, Kamarajar Salai, Madurai.

All are welcome !!

Watch the 53rd ICEU Conference Events Video