Tuesday, November 26, 2013




இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கைவிடகோரி திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று (26.11.13) திண்டுக்கல்  பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு என்.எஸ் .வி . சித்தன் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர் .நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் எஸ் .கிருஷ்ணன் ,கிளை செயலாளர் தோழர் எம் . மகாலட்சுமி ,மதுரை கோட்ட சங்க உதவி பொருளாளர் தோழர் எஸ் .தனிகைராஜ் ,ஒய்வூதியர் சங்க செயலாளர் தோழர் சி . சந்திரசேகரன் ,மற்றும் முன்னணி தோழர்கள் ஆர்.வெயில்முத்து, பி. மருதுபாண்டி ,வி .ஆறுமுகம் ,ஆர்.பிச்சை ,பி. கந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 25, 2013






இன்சூரன்ஸ் அந்நிய நேரடி மசோதாவை கைவிடக்கோரி இன்று (25.11.2013) திருநகர் கிளை தோழர்கள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.P.மாணிக்கம் தாகூர் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினர்.
நிகழ்வில் திருநகர் கிளை தலைவர் தோழர் S.கிருஷ்ணன் செயலாளர் தோழர் M.மகாலட்சுமி , மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் தோழர் M.உஷா,மற்றும் K.விஜயலட்சுமி,S.சரோஜா,S.கீதா,S.செல்வி,S.சூடாமணி,மற்றும் கிளைசங்க உறுப்பினர்கள் தோழர் R.வெயில்முத்து,P.மருதுபாண்டி,V.ஆறுமுகம்,
S.சிசில்  மனுவெல் சுதாகர் ,பாலச்சந்தர்,G.ரெங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர் மகஜரை வழங்கி மசோதாவின் அபாயம் குறித்து கோட்ட சங்க முன்னாள் தலைவரும் ஒய்வூதியர் சங்க செயலாளருமான தோழர் C. சந்திர சேகர பாரதி விளக்கினார் ,கோட்ட சங்க உதவிப் பொருளாளர் தோழர் S.தனிகைராஜ் உடனிருந்தார் . 

Sunday, November 24, 2013



                இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி

மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் இன்று (24.11.2013) காரைக்குடியில் மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு ப .சிதம்பரம் அவர்களை சந்தித்து இன்சூரன்ஸ் மசோதாவை கைவிடக்கோரும்  மகஜர் ஒன்றை மதுரை கோட்டச் சங்க தலைவர் தோழர்  G.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வழங்கி மசோதாவை கைவிட வலியுறுத்தினார் .கோட்ட சங்க பொதுச் செயலாளர் தோழர் N.சுரேஷ்குமார் உடன் கோட்டச் சங்க பொறுப்பாளர்களும் நிகழ்வினை ஏற்பாடு செய்த காரைக்குடி மற்றும் தேவகோட்டை ,திருப்பத்தூர் கிளை சங்க பொறுப்பாளர்கள் முன்னணி தோழர்கள் மற்றும் காரைக்குடி கிளை வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Thursday, November 21, 2013








இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் திருநகர் கிளை சார்பாக இன்று தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை சந்தித்து மகஜரை வழங்கினர் . நிகழ்வில் திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஒய்வு பெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் தோழர் சந்திரசேகர பாரதி ,திருநகர் கிளை செயலாளர் தோழர் மகாலட்சுமி மற்றும் கோட்டசங்க உதவி பொருளாளர் தோழர் தனிகைராஜ் கிளை சங்க பொறுப்பாளர்கள் தோழர் வெயில் முத்து மற்றும் மருதுபாண்டி ,ஆறுமுகம் ,அழகர்சாமி முகவர் பொன்மநோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்