Tuesday, March 20, 2012

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி உழைக்கும் மகளிர் சார்பாக சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் நம் தென்மண்டல இணைச் செயலாளர் தோழர் M . கிரிஜா பங்கேற்று கருத்துரை வழங்கினர் .                          

Thursday, March 8, 2012

எல்லையை விரிவாக்கும் எல்.ஐ .சி. மகளிரின் மாநில அளவிலான கலை விழா

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான எல்.ஐ .சி மகளிர் கலைவிழா காட்சிகளின் சில பதிவுகள் 
                                                                           

                                      

                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் கீதா
                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் NMS
                                         கலை விழாவினை வாழ்த்தி தோழர் பாலபாரதி
 கலை விழாவினை வாழ்த்தி தோழர் குன்னி கிருஷ்ணன்
  சேலம் கோட்ட மகளிரின் குறுநாடகம்
 
                                           

                                    நெல்லை கோட்ட மகளிரின் கலை நிகழ்ச்சி 

                                    









Wednesday, March 7, 2012

உன்னதம் நிறைந்த உலக மகளிர் தினம்


உன்னதம் நிறைந்த உலக மகளிர் தினம்


20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பெண்கள் பரவலாகத் தொழிற்சாலை களில் பணியாற்ற ஆரம்பித்தனர். அன்று நிலவிய படுமோசமான வேலை நிலை மைகளை எதிர்த்துத் தொழிற்சங்கங்கள் பற்பல போராட்டங்களைக் கட்டவிழ்த் துக் கொண்டிருந்தன. வீடுகளை விட்டு வேலைக்காக வெளியே வந்த பெண் தொழிலாளிகளும் போராட்டங்களில் இறங்கினர். அதே காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களில், பெண்களுக்கு வாக்குரிமை என்ற அரசியல் கோரிக்கையும் எழ ஆரம்பித் தது. முதலாளித்துவ பெண்ணியவாதி கள், பெண்களுக்கு வாக்குரிமை என் பதை மட்டும் முன்வைத்த போது, கிளாரா ஜெட்கின் போன்ற சோஷலிஸ்டுகள், அனைவருக்கு வாக்குரிமை, அதில் பெண்களுக்கும் வாக்குரிமை என்ற கோஷத்தை எழுப்பினர். அன்றைய காலத்தில், சொத்து படைத்த ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றாமல், பெண்களுக்கு வாக்குரிமை கிடைத் தால், சொத்து படைத்த பெண்கள் மட்டும் தானே வாக்களிப்பவர்களாக மாறுவார்கள் என்பது அவர்களின் சரியான வாதமாக அமைந்தது.

இவ்வாறு ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும், மறுபக்கம் அர சியல் உரிமைகளுக்காகவும் போராட்ட அலைவீசத் துவங்கியது. இப்போராட்டங் களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித் தனர். உதாரணமாக, 1908ல் நியூயார்க் நகர பஞ்சாலை மற்றும் ஆடை நிறுவனங் களின் பெண் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, கூலி உயர்வு கோரிக்கை களை முன் வைத்து, தெருக்களை நிரப் பினர். காவல் துறையின் அடக்குமுறை யை சந்தித்தனர். 1909ல் கடும் பனி யிலும், 3 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர்.

இத்தகைய சூழலில், 1910ல் கோபன் ஹேகனில், இரண்டாவது உலக சோஷ லிசப் பெண்கள் மாநாடு நடந்தது. 17 நாடு களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில், ஜெர் மானிய கம்யூனிஸ்டு கிளாரா ஜெட்கினும், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா கொலந்தோயும் பெண்கள் பிரச்சனை கள் குறித்து வலுவாகப் பேசினர். அதன் முடிவில், பெண்கள் உரிமைகளைப் பேச, போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க, ஒரு தினம் உருவாக்கப் பட வேண்டும், பணி நிலை மேம்பாடு, வாக்குரிமை, உலக சமாதானம் போன்ற கோரிக்கை களுக்காக, அது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பிரகடனத்தை, கிளாரா ஜெட்கின் முன்மொழிந்தார். அப்போது, மார்ச் 8 என்பது தீர்மானிக்கப் படவில்லை.

பணி நிலை மேம்பாடு என்ற பெண் தொழிலாளிகளின் கோரிக்கையும், வாக் குரிமை என்ற அனைத்துப் பெண்களின் கோரிக்கையும், உலக சமாதானம் என்ற பொது கோரிக்கையும் அழுத்தம் பெற்றன என்பதைப் பார்க்கும் போது, பெண், உழைப்பாளியாகவும், குடிமகளாகவும் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கிறாள் என்கிற புரிதல் உருவானது தெளிவா கிறது. இந்தப் பின்னணியில்தான், 1911 முதல் உலகின் பல பாகங்களில் பெண் களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக, இத்தினம் கடைப்பிடிக்கப் பட்டு வரு கிறது. 1913ல் தான் மார்ச் 8 என்ற தேதி தீர்மானிக்கப்படுகிறது. ரஷ்யாவில் முதன் முறையாக, அந்த வருடத்தில் தான் பெண்கள் தினப் போராட்டங்கள் நடந்தன. 4 ஆண்டுகள் கழித்து, 1917 மார்ச் 8ல், ரஷ்யப் பெண்கள், உணவுக் கும், சமாதானத்துக்கும் குரல் கொடுத்து, வீறு கொண்டு பெட்ரோகிராடு நகரத் தெருக்களில், கடல் அலை போல் குவிந் தனர். நவம்பரில் ரஷ்யப் புரட்சி வெடித் தது. 1975ல் தான், ஐ.நா.சபை, மார்ச் 8, பெண்கள் தினமாக அனுசரிக்கப் பட அறைகூவல் விடுத்தது.
                    இத்தகைய தியாகம் நிறைந்த உன்னத நாளை போற்றுவோம் . ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்களின் போராட்டம் சமூக மாற்றத்தின் ஒரு பகுதியே  எனவே உயர்த்தி பிடிப்போம் மகளிர் நலன்களை ....

                                                                                     கட்டுரை:  தோழர்.  உ. வாசுகி