Friday, December 28, 2012

ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மக்கள் சந்திப்பு இயக்கம்


ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் தோழர் M.அர்ச்சுனன் மற்றும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் மெய்யப்பன் இந்திய தொழிற்சங்க மையம் சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் உமாநாத் இந்தியாவிற்கான மக்கள் இயக்க தலைவர் திரு கண்ணப்பன்,சிவகங்கை கிளை முதன்மை மேலாளர் திரு ரெங்கநாதன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் தோழர் ராகவன், முகவர் கிளை சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் என்ற பாபு (லியாபி) தோழர் சந்திரன் (லிகாய்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . மதுரை கோட்டஇன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுசெயலாளர் தோழர் N.சுரேஷ் குமார் கருத்துரை வழங்கினார்.





"வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறுவியாபாரம் ?"

"வரலாமா வால்மார்ட் ! வாழுமா சிறுவியாபாரம் ? " பிரசுர வெளியீட்டு நிகழ்வில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் தோழர் M. அர்ச்சுனன் வெளியிட நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் திரு S.அறிவுதிலகம் மற்றும் P.சுகர்னோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வினை இந்தியாவிற்கான மக்கள் இயக்க சிவகங்கை கிளை தலைவர் திருS.கண்ணப்பன் அவர்கள் தலைமை ஏற்க இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை கோட்டதலைவர் தோழர் G. மீனாட்சி சுந்தரம் அவர்கள் கருத்துரை வழங்கினர்.
 
 

 http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/c118.0.403.403/p403x403/522903_416884215043994_573939093_n.jpg

Wednesday, December 26, 2012

வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்





வெண்மணி சங்கமம்-தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்

வெண்மணி சங்கமம் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு-டிசம்பர் 25,2012- தருமபுரி வன்கொடுமை எதிர்ப்பு கருத்தரங்கம்- திருவாரூர்-சிறப்புரை-தோழர் டில்லிபாபு, எம்.எல்.ஏ, தோழர் ப.நீலவேந்தன், தலைமை- க.சுவாமிநாதன். தர்மபுரி நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் கிராமங்களில் இருந்து 10 பேர் பங்கேற்பு- ரூ 25000 தருமபுரி வழக்கு நிதி அளிப்பு - தருமபுரி இன்சூரன்ஸ் தோழர்களின் களப்பணிக்கு பாராட்டு- தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கைகள் பற்றிய பவர் பாயிண்ட் பிரசண்டேசன்-பாரதி புத்தகாலாயத்தின் இரண்டு நூல்கள் வெளியீடு- மொழிபெயர்ப்பாளர் தோழர் சி சுப்பாராவுக்கு பாராட்டு.


வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் தோழர் க .சுவாமிநாதன் தென்மண்டல பொதுசெயலாளர் ,தோழர் டில்லி பாபு  அரூர் சட்ட மன்ற உறுப்பினர் , தோழர் நீலவேந்தன் ஆதி தமிழர் பேரவை மாநில செயலாளர் ஆகியோர்  இன்சூரன்ஸ் ஊழியர்களுடன் வீர அஞ்சலி செலுத்தினர் 

Thursday, December 13, 2012






இன்சூரன்ஸ் ஊழியர்களின் இலட்சம் துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம் 

            இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு  உயர்வை  
கைவிடக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் மதுரை கோட்டம் முழுமையும்  இலட்சம் துண்டு பிரசுரங்களை வழங்கும் இயக்கத்தை 12.12.12 அன்று ஒரே  நாளில் 26 கிளை மையங்களில் நடத்தினர் . அதன் ஒரு பகுதியாக சிவகங்கை கிளை சங்கம் சார்பில் சிவகங்கை வார சந்தை பகுதியில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கும் இயக்கம் நடைபெற்றது .நிகழ்ச்சியினை  தலைமை ஏற்று சிவகங்கை கிளை தலைவர் தோழர் செல்லபாண்டிநடத்தினார் .நிகழ்ச்சியில் மதுரை கோட்ட சங்க துணை பொருளாளர் தோழர் தனிகைராஜ் சிவகங்கை CITU மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி தோழர் கந்தசாமி ,வழககறிஞர் தோழர் மதி , ஒய்வு பெற்ற அரசு ஊழியர் 
தோழர்  நல்லையா ,இன்சூரன்ஸ் சிவகங்கை கிளை ஊழியர்கள் மற்றும் முகவர்கள்  திரளாக பங்கேற்றனர் .