Sunday, February 2, 2014

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 23வது அகில இந்திய மாநாட்டில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வரலாற்றில் முதல் மகளிர் இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் எம்.கிரிஜா அவர்கள் மதுரை கோட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் தோழர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை ஏற்றார் தோழர் நா.சுரேஷ்குமார் மாநாட்டின் முடிவுகள் குறித்தும் அமலாக்கம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார் தோழர் பி மகாலிங்கம் முன்னிலை வகித்தார் . தோழர் கிரிஜா அகில இந்திய இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டு மதுரை கோட்டத்தில் பங்கேற்ற முதல் கூட்டம் என்பது சிறப்பு . அவரை மதுரை கோட்ட சங்க பொருளாளர் தோழர் அருணா அவர்கள் பொன்னாடை அணிவித்து நம் அன்பை தெரிவித்தார் . தோழர் கிரிஜா பணி சிறக்க தோழர் இ.எம்.ஜோசப் முன்னால் தென் மண்டல துணை தலைவர் அவர்களும் மதுரை கோட்ட எல்.ஐ .சி பென்சனர் சங்க செயலாளர் தோழர் சந்திரசேகர் (பாரதி ) அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் . 

   23வது அகில இந்திய மாநாட்டின் முடிவுகளை அமுலாக்கும் கோட்டங்களில் மதுரை கோட்டம் முதல் கோட்டமாக அமைய இந்நிகழ்வு  அமைந்தது .
 
                                                                  

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.