Tuesday, January 21, 2014

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

Sunday, January 5, 2014

சிகரம் நோக்கி

 








 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மதுரை மாவட்டம் சார்பில் நடைபெற்ற  10 &  +12 மாணவர்களுக்கான சிகரம் நோக்கி நிகழ்ச்சி 05.01.2014 அன்று மதுரை இளங்கோ மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது 1000க்கும்அதிகமான மாணவ ,மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர் நிகழ்வில் மதுரை மாவட்ட DR.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தனது எளிய பங்களிப்புடன் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ,பயிற்சி கேள்வி பதில்களை தயாரித்து வழங்கியது .  மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து உரையாற்றினர் . மதுரை கோட்டச்சங்க பொதுசெயலாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் தலைவர் தோழர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர் . மைய ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பரவை பாலு , தோழர் கோவிந்தராஜன் ,தோழர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .

Monday, December 23, 2013

DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்

       DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம் 



அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 57வது நினைவு தின கருத்தரங்கம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேவகோட்டை கிளையின் சார்பில் தேவகோட்டையில் 23.12.2013 அன்று நடைபெற்றது. தேவகோட்டை கிளை செயலாளர் தோழர் ஜி. சந்திரசேகர் தலைமை ஏற்க கிளை செயலாளர் தோழர் வி . செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார். DR.அம்பேத்கர் பற்றிய நினைவுகளை கருத்துரையாக மதுரை கோட்ட பொதுசெயலாளர் தோழர் நா.சுரேஷ்குமார் கருத்துரையாற்றினார். நிகழ்வினை வாழ்த்தி எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் தோழர் வைரவன் ,லியாபி சங்க பொறுப்பாளர் தோழர் எஸ்.மரியலூயிஸ்,லிகாய் சங்க பொறுப்பாளர் தோழர் தங்கராஜன், மூட்டா சங்கம் சார்பில் தோழர் முருகன் ,த.மு.எ.க.ச தேவகோட்டை கிளை சார்பில் தோழர் சி.போஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கருத்தரங்கில் சிவகங்கை மாவட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் ,காரைக்குடி ,திருப்பத்தூர் ,சிவகங்கை கிளைசங்க பொறுப்பாளர்கள், முகவர்கள்,வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர் .மகளிர் துணைக்குழு இணை செயலாளர் தோழர் எஸ் .தெய்வானை நன்றியுரை வழங்கினார் .

Tuesday, December 17, 2013

23 வது அகில இந்திய மாநாடு

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  

23 வது அகில இந்திய மாநாடு

சனவரி, 20-24, 2014
 நாக்பூர்  
                                                 
 
வெல்லட்டும் ! சிறக்கட்டும் !!

Saturday, December 7, 2013

தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு: டி.கே.ரங்கராஜன்  எம்.பி.பேச்சுதென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநில சிறப்பு மாநாட்டில் பேசுகிறார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன். உடன், காப்பீட்டுக் கழக நிர்வாகிகள் (இடமிருந்து) ஜி.ஆனந்த், புண்ணியமூர்த்தி, க.சுவாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை.

மத்திய அரசு பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் தமிழ்நாடு தொழில், வர்த்தக சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் அவர் பேசியது:
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக உயர்த்துவது, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு பாஜக முழுமையாக ஆதரவு தருகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிய இன்னும் குறுகிய நாள்களே உள்ளன. நான்கு மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பின்படி இருந்தால், இன்சூரன்ஸ் மசோதாவை பாஜக நிறைவேற்ற விடாது. ஆகவே, இன்சூரன்ஸ் மசோதா நிறைவேறாது என்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறேன். அதற்கு காரணம் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திய போராட்டம்தான். அன்றைய சூழலில் இடதுசாரிகளுக்கு மக்களவையில் 64 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 17 உறுப்பினர்களும் இருந்தனர்.
இதனால் இன்சூரன்ஸ் மசோதாவை காங்கிரஸ் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய சூழலில் அத்தகைய பலம் இல்லை, இதனால் மசோதா கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க மட்டுமே முடியும்.
மத்திய அரசு பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, நடுத்தர, உற்பத்தியாளர்களுக்கு மின்வெட்டு, கடனுக்கான வட்டி அதிகரிப்பு ஆகியன மட்டுமே பாதிப்பு அல்ல. புதிய பொருளாதாரக் கொள்கைகளும் அதிலிருக்கும் நிபந்தனைகளும் சிறு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இன்சூரன்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டால் அது தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும். ஆகவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைக் கடுமையாக எதிர்க்கிறது.
இன்சூரன்ஸ் துறையைப் பாதுகாப்பது என்பது, மக்களின் சேமிப்பைப் பாதுகாப்பது மட்டுமல்ல. கடந்த 60 ஆண்டு காலமாக இத் துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுவந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதும் கூட. அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் பொதுமக்கள், அவர்களது சேமிப்புக்கு ஆதாரமாக இருக்கும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதை எதிர்த்துப் போராடவில்லை. காரணம், இதன் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குச் சென்று சேரவில்லை. அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இன்சூரன்ஸ் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, பொதுச் செயலர் க.சுவாமிநாதன், துணைத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலர் ஜி.ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.
நான்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பது, இன்சூரன்ஸில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தக் கூடாது, பொது இன்சூரன்ஸ் பங்குகளை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                                                                                 

 சிறப்பு மாநாட்டிற்கு தென்மண்டல துணைத்தலைவர் தோழர் R.புண்ணிய மூர்த்தி தலைமை ஏற்க மதுரை கோட்ட சங்க பொதுச்செயலாளர் தோழர் N .சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்த பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல பொறுப்பாளர் தோழர் ஆனந்த் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் மாநாட்டினை வாழ்த்தி CPM மாநிலங்களவை உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன் ,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் இரா.அண்ணாதுரை மற்றும் எல்.ஐ.சி தேசிய களப்பணியாளர் கூட்டமைப்பின் மதுரை கோட்ட தலைவர்  தோழர் ஆபேத் மனோகர் தேவாரம் ,லிகாய் தென்மண்டல பொதுசெயலாளர் தோழர் M.செல்வராஜ்       எல்.ஐ.சி ஒய்வு பெற்றோர்  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் C.சந்திர சேகரன் (பாரதி)  முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் N.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . மாநாட்டினை நிறைவு செய்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் க.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார் .பொது இன்சூரன்ஸ் மதுரை மண்டல செயலாளர் தோழர் புஷ்பராஜ் நன்றியுரை வழங்கினார்