Monday, December 23, 2013

DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்

       DR.அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம் 



அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 57வது நினைவு தின கருத்தரங்கம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேவகோட்டை கிளையின் சார்பில் தேவகோட்டையில் 23.12.2013 அன்று நடைபெற்றது. தேவகோட்டை கிளை செயலாளர் தோழர் ஜி. சந்திரசேகர் தலைமை ஏற்க கிளை செயலாளர் தோழர் வி . செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார். DR.அம்பேத்கர் பற்றிய நினைவுகளை கருத்துரையாக மதுரை கோட்ட பொதுசெயலாளர் தோழர் நா.சுரேஷ்குமார் கருத்துரையாற்றினார். நிகழ்வினை வாழ்த்தி எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் தோழர் வைரவன் ,லியாபி சங்க பொறுப்பாளர் தோழர் எஸ்.மரியலூயிஸ்,லிகாய் சங்க பொறுப்பாளர் தோழர் தங்கராஜன், மூட்டா சங்கம் சார்பில் தோழர் முருகன் ,த.மு.எ.க.ச தேவகோட்டை கிளை சார்பில் தோழர் சி.போஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கருத்தரங்கில் சிவகங்கை மாவட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் ,காரைக்குடி ,திருப்பத்தூர் ,சிவகங்கை கிளைசங்க பொறுப்பாளர்கள், முகவர்கள்,வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர் .மகளிர் துணைக்குழு இணை செயலாளர் தோழர் எஸ் .தெய்வானை நன்றியுரை வழங்கினார் .

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.