Saturday, October 1, 2011

ஓய்வறியா தலைவருக்கு எல். ஐ. சி பணிநிறைவு பாராட்டு

தோழர்  வேணுகோபால் அவர்களின் பணிநிறைவு நிகழ்ச்சியில் சில...




                    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்  K.வேணுகோபால் அவர்கள் செப் 30 , 2011 அன்று தனது 41 ஆண்டு கால எல் ஐ சி  பணியினை நிறைவு செய்கிறார் .
                      எல் ஐ சி  பணியில் சேர்ந்து தனது தொழிற்சங்க பணியினை துவக்கிய தோழர் வேணுகோபால் மண்டல, அகில இந்திய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார் . 11 ஆண்டு கால அகில இந்திய பொறுப்புகளை AIIEA வின் பாரம்பரியத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் பகலவனை போல ஓய்வின்றி பன்முகத்தன்மை கொண்ட மகத்தான தலைவராய் பணியாற்றிய தோழர் வேணுகோபால்  2004 ஆம் ஆண்டு சுனாமி 2005 ஆம் ஆண்டு காஷ்மீர் பூகம்ப நிவாரண பணிகளில் ஊழியர்களை செயல்பட செய்து தானும் நேரடியாக சென்று தனது அதரவுக்கரங்களை நீட்டியவர் . கோட்டசங்க மாநாடு தென்மண்டல மாநாடு என பல்வேறு மாநாடுகளிலும் இந்தியா முழுமையும் சுற்றிச்சுற்றி சோர்வறியாது பணியாற்றிய தலைவர்  இன்று தனது LIC பணியினை நிறைவு செய்கிறார் அலுவலக பணியில் மட்டுமே ஒய்வு.

"நாட்டிற் குழைத்தல்,' இமைபொழுதுஞ் சோராதிருத்தல்"

"வெற்றியே யன்றி வேறேதும்  பெருகிலோம்"

"நாட்டினைத் துயரின்றி நன் கமைத்திடுவதும்
உளமெனு நாட்டையொரு பிழையின்றி ஆள்வதும்"

என்ற மகாகவி பாரதியின் வரிகளை மனதில் ஏந்தி பணியாற்றிகொண்டிருக்கும்    மகத்தான தலைவருக்கு தொழிற்சங்க பணியில் என்றுமே ஓய்வில்லை

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.