Saturday, September 3, 2011

சமூக நீதிக்கான குரல்

"புகழின்
வாரிசுகளே !
புனையப்படாத காவியத்தின் நாயகர்களே !
மகாசக்தியின் புத்திரர்களே !
அவர்களுக்கும்
மற்றவர்க்கும்
நம்பிக்கையாக வந்தவர்களே !
தூக்கம் நீங்கிய
சிங்கங்களாக எழுங்கள் ! எவரும்
முறியடிக்க முடியாத
எண்ணற்ற
வீரர்களாக எழுங்கள் !


நீங்கள்
உறங்கியபோது
உங்கள் மீது விழுந்த
சங்கிலிகளை
பனித்துளிகளைப் போலத்
தரையில் மோதி உடையுங்கள்.


நீங்கள் பலர்
அவர்கள் சிலர்."


-- என்ற கவிஞர் ஸெல்லியின் வார்த்தைகளை மெய்ப்பிக்கின்ற வகையில்
வருகின்ற ஆகஸ்ட்டு 10 சென்னையில் சங்கமிப்போம்.


தோழமையுடன்,
மு.இராஜாராம்,(புலியூரான்)
எல்.ஐ.சி.


"
சாதிய ஒடுக்குமுறைகள் தலித்,பழங்குடியினரின் அரசியல்,பொருளியல்,சமுக வாழ்வில் பெரும் இடைவெளியை எற்படுதிருக்கிறது. அரசின் வரவு செலவுத்திட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டவையே பட்டியலின, பழங்குடி இனத்தவருக்கான சிறப்பு உட்கூறு திட்டங்கள். ஆனாலும் வஞ்சனை தொடர்ந்தது.சிறப்பு உட்கூறு திட்டங்களையும் நீர்த்துப்போக செய்தார்கள் . தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கணக்கு கேட்கிறது. தலித் பழங்குடியினர் இழந்தது எவ்வளவு ? ஒதுக்கப்பட்டும் திருப்பிவிடப்பட்ட தொகை எவ்வளவு ? துணைத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவது எவ்வாறு ? இப்படி
 
வஞ்சிக்கப்பட்டவைகளை திரும்பப்பெறும் வரை ஓயாது நம் குரல்; ஒவ்வொரு ரூபாயும் பட்டியலின மக்களின் கைவசம் ஆகும் வரை"


No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.