Saturday, September 10, 2011

அவதியுறும் அம்புகள்

                     அவதியுறும் அம்புகள்                                          
அம்புகளுக்கு தண்டனை தரும்
அற்புதமான நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு

தொடர்பைத் தொலைத்ததில்
காமன்வெல்த் திருவிளையாடலில்
எண்ண முடியாத கோடிகள் ....
எழுமலையான் மொட்டை
கார்கில் குடும்பத்தினருக்கு... ஆதர்ஸில்
நம்பிக்கையைப்  பெற
நாணயம் தேவையில்லை
நோட்டுக்களே போதும் என்ற
செய்வினை ஜெயிலில்
செயப்பாட்டு வினை நாற்காலியில்
திக்குத் தெரிந்த திகாரில்
இலையுதிர் காலம் அம்புகளுக்கு 
வசந்த காலம் என்றுமே
எய்தவனுக்கா !
                                                     சி. சந்திரசேகரன்
                                             கோட்ட அலுவலகம், மதுரை

                                                                                                                 
 

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.