Sunday, November 24, 2013



                இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி

மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் இன்று (24.11.2013) காரைக்குடியில் மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு ப .சிதம்பரம் அவர்களை சந்தித்து இன்சூரன்ஸ் மசோதாவை கைவிடக்கோரும்  மகஜர் ஒன்றை மதுரை கோட்டச் சங்க தலைவர் தோழர்  G.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வழங்கி மசோதாவை கைவிட வலியுறுத்தினார் .கோட்ட சங்க பொதுச் செயலாளர் தோழர் N.சுரேஷ்குமார் உடன் கோட்டச் சங்க பொறுப்பாளர்களும் நிகழ்வினை ஏற்பாடு செய்த காரைக்குடி மற்றும் தேவகோட்டை ,திருப்பத்தூர் கிளை சங்க பொறுப்பாளர்கள் முன்னணி தோழர்கள் மற்றும் காரைக்குடி கிளை வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.