Thursday, November 21, 2013








இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகஜர் வழங்கும் இயக்கம்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி மூலதன உயர்வை கண்டித்து நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதன உயர்வை கைவிட கோரி மகஜர் வழங்கி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் திருநகர் கிளை சார்பாக இன்று தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை சந்தித்து மகஜரை வழங்கினர் . நிகழ்வில் திருநகர் கிளை இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஒய்வு பெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் தோழர் சந்திரசேகர பாரதி ,திருநகர் கிளை செயலாளர் தோழர் மகாலட்சுமி மற்றும் கோட்டசங்க உதவி பொருளாளர் தோழர் தனிகைராஜ் கிளை சங்க பொறுப்பாளர்கள் தோழர் வெயில் முத்து மற்றும் மருதுபாண்டி ,ஆறுமுகம் ,அழகர்சாமி முகவர் பொன்மநோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.